இசைத்தட்டு வெளியீடும் ஊடகவியலாளர் சந்திப்பும்

இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் Queen Cobra பிரபாலினி பிரபாகரன் வழங்கும் இன்னிசை மழை இசை நிகழ்ச்சியும், ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி பரமேஸின் ‘உனக்கு தெரியுமா’ பாடலுடன் 50 பாடல்கள் அடங்கிய 50 வருட இசைத்தென்றல் தொடரின் இசைத்தட்டு வெளியீடு மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வு என்பன திங்கட் கிழமை (27) மாலை கொழும்பு வெள்ளவத்தை சபையர் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான தமுகூ தலைவர் மனோ கணேசன், மமமு தலைவர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு மும்மொழிகளின் எழுத்தாளரும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவருமான முனைவர் சதீஷ்சிவலிங்கம் தலைமை தாங்கினார்.

புரவலர் புத்தகப்பூங்கா நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் இசைத்தட்டுக்களின் முதற் பிரதிகளை பெற்றுக் கொண்டார்.

Related posts