கொலைப் பழியை ஏற்றுக் கொள்ள 3 பேருக்கு ரூ.15 லட்சம்

தான் செய்த கொலைக்கான பழியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி மூன்று பேரிடம் நடிகர் தர்ஷன் தலா ரூ.5 லட்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தனது காதலியான பவித்ரா கவுடாவை ஆன்லைனில் மிரட்டி தொந்தரவு செய்ததாக கூறி, ரேணுகா சுவாமி என்ற தனது ரசிகரை ஆள் வைத்து கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் மைசூரில் இருந்த அவரை கடந்த ஜூன் 11 அன்று கர்நாடக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த நிலையில், தான் செய்த கொலைக்கான பழியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி மூன்று பேரிடம் நடிகர் தர்ஷன் தலா ரூ.5 லட்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் சட்டப்படி விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்றும், குற்றவாளிகள் இரக்கம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெங்களூரு காவல் ஆணையர் பி.தயானந்தா தெரிவித்துள்ளார்.

தர்ஷன் உள்ளிட்ட 12 பேர் இந்த கொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி (33) என்பவரை கடத்தி வந்து தொடர்ந்து சித்திரவதை செய்து காமாட்சிபாளையத்தில் வாய்க்காலில் கொன்று வீசியதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts