பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் மாரடைப்பால் மரணம்

இந்திய திரை உலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் உஷா உதுப். 1960-ம் ஆண்டு தொடங்கிய இவரது இசைப்பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவர் தமிழில் எம்.எஸ். விஸ்வநாத இசையில் வெளியான மேல்நாட்டு மருமகள், இதயக்கனி, ஊருக்காக உழைப்பவன் ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையில் உருவான அஞ்சலி படத்தில் “வேகம் வேகம் போகும் நேரம்” என்ற பாடலை பாடியுள்ளார். தமிழில் மன்மதன் அம்பு படத்தில் உஷா உதுப் நடித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. உஷா உதுப், ஜானி சாக்கோ என்பவரை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகன், மகள் உதுப் கணவரான ஜானி (வயது 78) நேற்று கொல்கத்தாவில் உள்ள வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் உடலுக்கு அசவுகரியமாக இருப்பதாக கூறியதை கூறியதை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. ஜானி சாக்கோ, உஷா உதுப்பின் 2-வது கணவர் ஆவார்.

Related posts