பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.

சட்டமா அதிபராக செயற்பட்ட சஞ்ஜய் ராஜரத்தினத்தின் சேவைக்காலம் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதியுடன் நிறைவடைந்தமையினால் கடந்த சில நாட்களாக சட்டமா அதிபர் பதவியில் வெற்றிடம் நிலவியது.

இதனை அடுத்து, ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.

Related posts