எஜமானின் மறைவுக்கு கண்ணீர் விட்டழுத யானை!

மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தவறும் நிலையில், யானை ஒன்றின் செயற்பாடு பலரைக் கண்கலங்க வைத்துள்ளது.இது தொடர்பான காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்புள்ளை, கண்டலம பகுதியில் நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், தனக்கு உணவு, நீர் வழங்கிய எஜமானின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத யானை கண்ணீர் விட்டு அழுதது.

உயிரிழந்த தனது எஜமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த யானை சென்ற நிலையில், மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியது. அத்துடன், உயிரிழந்தவரினுடைய உறவினர்களின் கைகளைப் பிடித்து யானை சோகத்துடன் தனது கவலையை வெளிப்படுத்திய பின்னர், அங்கிருந்து சென்றது.

ஐந்து அறிவு படைத்த யானையின் இந்தச் செயற்பாடு, அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

Related posts