முதலாவது தேர்தல் முடிவு இன்று இரவு 11 மணிக்குள் வெளியாகும்

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலினது வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று (21) இரவு 11.00 மணிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்குமென, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின்

முடிவுகள் பெரும்பாலும் முதலில் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகிறது.

Related posts