ரெட்ரோ’ பார்த்த சூர்யா மகிழ்ச்சி

ரெட்ரோ’ பார்த்துவிட்டு சூர்யா மகிழ்ச்சி அடைந்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெருசு’.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் ‘ரெட்ரோ’ படம் குறித்த கேள்விக்கு கார்த்திக் சுப்பராஜ், ”ரொம்ப நன்றாக வந்துள்ளது.

இறுதிகட்டப் பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

’ரெட்ரோ’ டீசர் வெளியானவுடன் நிறைய பேர் ‘தளபதி’ காட்சியமைப்பு மாதிரி இருப்பதாக சொன்னார்கள்.

அவர்கள் சொன்னது எனக்குமே ரொம்ப பிடித்திருந்தது.

ரஜினி சார் காட்சிகள் மாதிரி வைத்து எடுக்க வேண்டும் என்று எடுப்பதில்லை. படமாக்கிக் கொண்டிருக்கும் போது அதுவாகவே தோன்றும்.

அப்படி தான் படமாக்குகிறேன். ‘கண்ணாடி பூவே’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விரைவில் 2-வது பாடல் வெளியாகும். சூர்யா சார் படம் பார்த்துவிட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரெட்ரோ’.

சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Related posts